வந்தனஞ் சொல்லி வாழ்த்துவேன் தமிழை
வளர்த்தவர் தமக்கெலாம் வணக்கம்!
அந்தமிழ் மொழியை அறிந்திடச் செய்த
அறிஞரே கவிஞரே வணக்கம்!
இந்தமண் ணுலகம் எங்கிலும் வாழும்
என்தமி்ழ் மக்களே வணக்கம்!
நந்தமிழ் மக்கள் நலம்பெற எண்ணி
நானுமோர் கவிச்சரம் தொடுத்தேன்!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே,
முதற்கண் அடியேனின் அன்பார்ந்த வணக்கம்!
மு. ஆசைத்தம்பி எனும் பெயரில் தமிழ் நாளிதழ்களில் கடந்த சில
ஆண்டுகளாக அடியேன் தொடர்ந்து எழுதிவந்த பல கவிதைகளில் சிலவற்றை
இங்கே தொகுத்துள்ளேன்.
அவை: மொழி, சமுதாயம், காதல், கதம்பம், உரைவீச்சு என
நான்கு தலைப்புகள் கொண்டவை. நீங்களும் படித்துப் பாருங்களேன்.
![myphoto](myphoto.jpg)
உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால்...
எனது மின்னஞ்சல்
|