Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
யார் தமிழர்
தமிழ்த் தொண்டு
பூரிய தமிழர்
அடையாளம்
பீற்றுவது போதும்
தத்தளிக்கும் தமிழ்
கணினி
தமிழையன்றோ...
தமிழா விழித்தெழுக
தமிழ்ப் புத்தாண்டு
தமிழனுக்கு ஒரு...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொந்தமெனச் சொல்வதற்குத் தொல்லுலகில் தமிழனுக்குச்
செந்தமிழை அன்றியொரு செல்வமில்லை சிந்திப்பீர்!
நந்தமிழை நாமிழந்தால் நம்மைப்போல் மூடரில்லை!
அந்தமிழ்நம் மொழியின்றேல் அடையாளம் நமக்குண்டோ?

காய்க்கும்கனி மரங்களே! கனித்தமிழின் வேர்களே!
தாய்க்குலமே! தாய்க்குலமே! தமிழ்க்குருதி பெற்றீரே!
வாய்க்குழற மொழிபழகி மனக்கண்ணில் விளையாடும்
சேய்க்கும்தமிழ் உணர்வூட்டிச் செந்தமிழைப் போற்றிடுவீர்!

புலவர்களும் மன்னர்களும் பொன்னெனவே போற்றிவந்த
இலக்கியசெம் மொழியாம்,நம் இன்தமிழை இழப்பதற்கும்
தலையசைக்கும் பேதையரும் தமிழரென்று சொல்வதற்குக்
கலங்குதடா என்னெஞ்சம்! கனித்தமிழே என்செய்வேன்!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...