|
தமிழ்மொழியை வெறுத்தொதுக்கி அயல்மொழியை
மொழிபவரும் தமிழர் தானா?
தமிழ்மொழியைக் கற்பதற்கு மனங்கூசும்
பேதையரும் தமிழர் தானா?
தமிழ்க்கலையை எடுத்தெறிந்து பிறர்கலையைப் போற்றுவோரும் தமிழர் தானா?
தமிழ்நெறியில் வாழாமல் பிறர்நெறியில் வாழ்பவரும் தமிழர் தானா?
தமிழ்மறையொன் றியற்றியநம் வள்ளுவரை அறியாரும் தமிழர் தானா?
தமிழணங்கி்ன் கற்புரைத்த இளங்கோவை அறியாரும் தமிழர் தானா?
தமிழ்க்கவிதைக்(கு) எழில்சேர்த்த கம்பரையும் அறியாதார் தமிழர் தானா?
தமிழ்வளர்த்த பாண்டியனை அறியாரும் தரணியிலே தமிழர் தானா?
தன்மார்பைக் காட்டாமல் புறமுதுகைக் காட்டுவாரும் தமிழர் தானா?
சன்மானம் கொடுப்பானின் தாள்பணிந்து கிடப்பாரும் தமிழர் தானா?
சன்மார்க்க வழிமறந்து புன்மார்க்கம் செல்வாரும் தமிழர் தானா?
தன்மானம் சிறிதென்று வாழ்வுபெரி தென்பாரும் தமிழர் தானா?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|