|
கண்மையிலே என்னெஞ்சின் ஏட்டில்
கவியொன்று வரைகின்றாய் பெண்மயிலே !
பெண்மையிலே மயங்காத முனிவன்
பித்துக்கொண் டிடுவான்உன் வண்மையிலே!
உண்மையிலே சொல்கின்றேன் உள்ளம்
உருகிவிட்டேன் உன்பார்வை தண்மையிலே!
அண்மையிலே வந்திடுவாய் பெண்ணே!
ஆசைகொண்டேன் உன்னழகின் நுண்மையிலே!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|