|
நீல வானம் கருக்குமுன்னே
நிலவு வானில் ஒளிருமுன்னே
கோல வண்ண விண்மீன்கள்
கோடி வானில் தோன்றுமுன்னே
சோலை வனத்துப் பூக்களெல்லாம்
தூக்கம் தன்னில் வீழுமுன்னே
மாலை வருவேன் என்றுசொன்ன
மங்கை என்ன ஆனாளோ?
கயற்கண் காட்டி அவள்சிரிக்கும்
கன்னிச் சிரிப்பை இரசிக்காமல்
குயிலைப் போன்ற அவள்குரலின்
கொஞ்சு மொழியைக் கேளாமல்
மயிலைப் போன்ற அவளழகு
வனப்புத் தோற்றம் காணாமல்
புயல்வந் தாடும் வனம்போலப்
போரா டிடுதே எனனெஞ்சம்!
வான மெங்கும் இருள்படர்ந்து
வயிர பூக்கள் மின்னுடுதே!
தேனி லாவும் தண்ணொளியைச்
சிந்தி வலமும் போகிறதே!
கானில் உறையும் பூக்களெல்லாம்
கண்ணில் உறக்கம் கொள்கிறதே!
ஏனோ அவளைக் காணவில்லை!
என்றன் உயிரும் கரைகிறதே!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|