|
ஓங்கிவரும் ஆசையலை உள்ளத்தில் மோதுதடி!
பூங்கொடிஉன் பருவமெனும் பொன்னான எழில்கண்டு!
சல்லாப மொழிபேசிச் சரசமிடும் பறவைபோல்
உல்லாச வானத்திலே உலவிடுவோம் கண்மணியே!
காதலெனும் கடலினிலே கடும்புயலே வந்தாலும்
வேதனைகள் கொள்ளாமல் வெற்றிகொண்டு வாழ்வமடி!
பொருளீட்டி இல்வாழ்வைப் பொழில்போலச் செழிக்கச்செய்(து)
அருள்கொண்டு வாழ்வமடி ஆசைமொழி பைங்கிளியே!
வாழ்வென்னும் பூங்காவில் வலம்போகும் வண்டுகளாய்
ஏண்வண்ண பூக்களிலும் இன்தேனை நுகர்வமடி!
பழமைதான் மேலென்று பாமரர்போல் வாழாமல்
விழிப்புற்றுப் புதுமையிலே மேன்மையுடன் வாழ்வமடி!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|