|
நித்திரை கொண்டால் போதும்
நின்னெழில் தோன்றி என்னைப்
பித்னாய் ஏக்குசெய்தி
பேதைநீ அறிகு வாயோ?
பத்தினி உன்னைப் பார்த்துப்
பார்த்துதான் ஏங்கு கான்றேன்!
எத்தனை நாள்தான் நானும்
இப்படி வாழ்ந்தி ருப்பேன்?
வானிலே நிலவைக் கண்டால்
மங்கைஉன் எழில்தான் தோன்றும்!
கானிலே மலரைக் கண்டால்
கன்னிஉன் முகந்தான் தோன்றும்!
மானினைக் கண்டால் போதும்
மங்கைஉன் விழிதான் தோன்றும்!
ஏனடி! உன்னால் தானே
இப்படிச் சிந்தை போனேன்!
வெண்ணிலா நீயென்றால் நான்
வெண்முகில் ஆவேன் அங்கு!
வண்ணமென் மலர்நீ யென்றால்
மணமது நானா வேனே!
பண்ணிசை நீயென்றால் நான்
பைந்தமிழ் பாட லாவேன்!
எண்ணமும் சொல்லி விட்டேன்
இன்னுஏன் இந்த மோனம்?
சேடியர் தூது விட்டுச்
செய்தியும் சொல்லி விட்டேன்!
நாடிநான் தழுவ வந்தால்
நழுவியே ஓடு கின்றாய்!
ஏடி! நீ இன்னும் என்னை
இன்னலில் வீழ்த்து கின்றாய்!
ஊடல்கொண்(டு) எனது நல்ல
உயிரைஏன் வதைக்கின் றாயோ?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|