Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
கனவின் சதி
காதலன் நான்...
என்றுதான் மீட்சி
ஆசைகொண்டேன்
காதலி
என்காதல் மெய்யடி
ஏன் மறந்தாய்
நான் கம்பனில்லை!
பெண் வேண்டும்
உயிரும் கரைகிறதே!
புதுமையில்...
பெண்ணின்பம்
ஊடல்
தமிழச்சி வேண்டும்!
அவள் நினைவு
வாசம் போமோ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்திர லோகத்து எழில்ரம்பை யோ? இவள்!
சிந்தையில் நின்றாடும் தேவியோ? - விந்தை
விழிகாட்டி நெஞ்சுருக்கும் மேனகையோ? இன்பப்
பொழில்தானோ பூவை இவள்?

கவிக்கரசன் கம்பனின் காவியந் தன்னில்
கவருமெழில் பெண்ணரசி கன்னி - இவள்வடிவோ?
துன்பங்கள் யாவும் தொலைக்கும் மருந்திவளோ?
இன்பவல்லி தானோ இவள்?

பொய்கையில் ஆடும் புதுமலர் தாமரையோ?
மொய்குழலாள் இவளோர் மோகினியோ? - மொய்க்கின்ற
வண்டுகள் வந்து வலமிடும் முல்லையோ?
பெண்டிவளின் பேரெழிலின் பேறு!

கற்பனை தன்னிலே காணாத ஓவியமோ?
அற்புதம் மேவும் அணங்கிவளோ? - பொற்பதமோ?
ஆடிவரும் பூங்கொடியோ? ஆயிழை யாளிவளைப்
பாடிடநான் கம்பனில்லை பார்!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...