|
இந்திர லோகத்து எழில்ரம்பை யோ? இவள்!
சிந்தையில் நின்றாடும் தேவியோ? - விந்தை
விழிகாட்டி நெஞ்சுருக்கும் மேனகையோ? இன்பப்
பொழில்தானோ பூவை இவள்?
கவிக்கரசன் கம்பனின் காவியந் தன்னில்
கவருமெழில் பெண்ணரசி கன்னி - இவள்வடிவோ?
துன்பங்கள் யாவும் தொலைக்கும் மருந்திவளோ?
இன்பவல்லி தானோ இவள்?
பொய்கையில் ஆடும் புதுமலர் தாமரையோ?
மொய்குழலாள் இவளோர் மோகினியோ? - மொய்க்கின்ற
வண்டுகள் வந்து வலமிடும் முல்லையோ?
பெண்டிவளின் பேரெழிலின் பேறு!
கற்பனை தன்னிலே காணாத ஓவியமோ?
அற்புதம் மேவும் அணங்கிவளோ? - பொற்பதமோ?
ஆடிவரும் பூங்கொடியோ? ஆயிழை யாளிவளைப்
பாடிடநான் கம்பனில்லை பார்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|