|
சில்லென்று குளிரும்அந்த
தேனருவி வீழ்ச்சிபக்கம்
இல்லாத கதைபோல
இருபறவைகள் சேர்ந்து
கல்லொன்றில் அமர்ந்துகொண்டு
கருத்திணைந்த காதலர்போல்
சல்லாப மொழிபேசித்
தாளாமல் தழுவுதடா!
அவ்வின்பக் காட்சியிலே
ஆர்வமிகக் கொண்டவனாய்
இவ்வையம் தனைவிட்டு
எங்கோநான் பறந்திருந்தேன்!
எவ்வாறு நானுரைப்பேன்
யான்பெற்ற இன்பத்தை!
இவ்வேளை அவளில்லை
என்னருகில் என்செய்வேன்?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|