Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
கனவின் சதி
காதலன் நான்...
என்றுதான் மீட்சி
ஆசைகொண்டேன்
காதலி
என்காதல் மெய்யடி
ஏன் மறந்தாய்
நான் கம்பனில்லை!
பெண் வேண்டும்
உயிரும் கரைகிறதே!
புதுமையில்...
பெண்ணின்பம்
ஊடல்
தமிழச்சி வேண்டும்!
அவள் நினைவு
வாசம் போமோ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
இடைவண்ண நளினங்கள் வளைந்தாடும் பூங்கொடி! - உன்
  இருவிழிகள் துள்ளும்கயல் கெண்டைகளின் பாங்கடி!
அடியேனை உன்மடியில் சேய்போல தாங்கடி! - அடி
  ஆயிழையே நீபிரிந்தால் துன்பந்தான் ஈங்கடி!

நீமொழியும் சொல்லெல்லாம் தித்திக்கும் தேனடி! - அடி
  நேரிழையே உன்பற்கள் முல்லைவண்ணம் தானடி!
பூமகளே உன்மீது பித்துகொண்டேன் நானடி! - உன்
  பொன்முகத்தில் வெறுப்பினைநீ காட்டுவதும் ஏனடி?

என்னன்பே என்றுசொல்லி என்னுறவைப் பேணடி! - உன்
  இருகரத்தை என்தோளில் பூச்சரமாய்ப் பூணடி!
உன்னாலே வாடுகின்ற என்னிலையைக் காணடி! - இந்த
  உலகத்தில் உன்னையன்றி என்வாழ்வும் வீணடி!

எனையுன்றன் நெஞ்சத்தில் நூல்போலத் தையடி! - என்
  இதயத்தின் ஏக்கத்தை நீதீர்த்து வையடி!
இனிக்கின்ற புத்தமுதே இவ்வுலகம் பொய்யடி! - அடி
  எழில்ராணி என்காதல் என்றென்றும் மெய்யடி!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...