Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
கனவின் சதி
காதலன் நான்...
என்றுதான் மீட்சி
ஆசைகொண்டேன்
காதலி
என்காதல் மெய்யடி
ஏன் மறந்தாய்
நான் கம்பனில்லை!
பெண் வேண்டும்
உயிரும் கரைகிறதே!
புதுமையில்...
பெண்ணின்பம்
ஊடல்
தமிழச்சி வேண்டும்!
அவள் நினைவு
வாசம் போமோ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
சரிந்துவிழும் கொடியிடையும் விரிந்தமலர்
   செவ்விதழும் தண்மை கொண்ட
பெருநிலவின் ஒளிமுகமும் கவர்ந்திழுக்கும்
   கருவிழியும் பித்துச் செய்யும்
இருதனமும் சிலைபோன்ற உடலழகும்
   நீள்குழலும் இனிது அமைந்த
அரிவையரின் அழகினிலே அகமயங்கிப்
   போகாத ஆண்மகன் யார்?

சித்தமிகு உறுதிகொண்ட வித்தகனும்
   பெண்ணழகில் சித்தம் கெட்டுத்
தத்தளித்துப் போக, அட! எத்தர்களின்
   நிலையதனைச் சாற்ற வேண்டா!
எத்தனையோ எண்ணிறந்த இன்பமெல்லாம்
   இவ்வுலகில் இருந்த போதும்
அத்தனையும் பெண்ணின்பம் ஆவதுண்டோ?
   இதைமறுக்கும் ஆண்மகன் யார்?

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...