Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
தமிழ்ப்பெயர்
தமிழ்நாட்டுத் தமிழன்
தமிழ்ச்செய்தி
இன்றைய தமிழ்ப்...
என்ன கொடுமை
பல்நோக்கு மண்டபம்
எங்கே மனிதநேயம்
ஊனமுற்ற தமிழ்
இன உறவும் மன...
சுதந்திரம்
ஏன் இந்த முடிவு
மனம் பதறுகிறோம்
நிழல் மரம்
இன்பம் பயக்குமா?
தமிழ் நாடகம்
சைபீர் முகமது
வேண்டாத சாதி
இன்றைய மாணவர்
புகைமூட்டம்
வாழ்த்துப் பரிமாரி...
தமிழ் நெடுங்கணக்கு
யாரிடம்போய்...
பிள்ளையையும்...
இந்நாட்டுத் தமிழன்...
செம்மொழி மாநாடு
பவன்- கறிஹவுஸ்
 
 
 
 
 
பல்கலைக்கழகம் பயிலும்
ஆரம்ப நிலை மாணவர்கட்கு
"இன உறவுகள்"
எனும் பாடநூல்
எழுதப்பட்டுள்ளது
அதில்,
இனத்தின் ஐக்கியம்
பழுதுபட்டுள்ளது!

நல்லிணக்த்தையும் நல்லுறவையும்
பாடமாக்க வேண்டிய
பேராசியர்க்குழு
பிணக்கையும் பிளவையும்
உண்டுபண்ணும் நூலியற்றியது
மாபெரும் வழு!

பாரபட்சம் கற்பித்து
ஓரினத்தை ஓரங்கட்ட
நினைப்பது மோசமாகும்!
நாளை நம் தலைமுறையின்
நல்லிணக்கமும் நல்லுறவும்
நாசமாகும்!

"இந்திய இளைஞர்கள்
சமுதாயத்தின்
தீய சக்தி!"

இப்படியெல்லாம் எழுதி
இன காழ்ப்புணர்வைத் தூண்டுபவர்க்கு
இல்லையோ புத்தி?

இந்த நூலைக் கற்கும்
இந்திய மாணவர்க்குத்
தாழ்வு மனப்பான்மையும்
அந்நிய இளைஞர்க்கு
இந்திய இளைஞர்மேல்
கீழ்த்தர மனப்பான்மையும்
உண்டுபண்ணும் அன்றோ!
இந்த நூல் மாணவரகட்குப்
பாடமாக்கப் படுவது
நன்றோ?

இந்திய இளைரை அன்றி
ஒட்டுமொத்த
இந்திய சமுதாயத்தின்
காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும்
நூலை இlயற்றியவர்கள்
மீட்டுக் கொள்ளவேண்டும்!

ஒரு கூரையின் கீழ்
பயிலும் மாணவர்கள்
நாளை இந்த
நாட்டின் தலைவர்கள்!
அவர்தம்
நெஞ்சிலே நஞ்சினைத்
தூவத் திட்டமா?
ஈதென்ன
பேராசிரியர்தம்
கொட்டமா?

வரலாறுகள் எழுதப்படும் போது
அதில்,
உண்மை மறைக்கப்பட்டுப்
பொய்மை புகுத்தப்படுவது கூடாது!

உள்ளது உள்ளபடி
எழுதப் படவேண்டும்!
அனைத்துச் சமுகமும்
உடன்படவேண்டும்!

பயில்கின்ற பல்லின
மாணவர்தம்
மன உறவும் இன உறவும்
மேம்படவேண்டும்!
நல்லிணக்கமும் நல்லுறவும்
திடம்படவேண்டும்!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...