Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
தமிழ்ப்பெயர்
தமிழ்நாட்டுத் தமிழன்
தமிழ்ச்செய்தி
இன்றைய தமிழ்ப்...
என்ன கொடுமை
பல்நோக்கு மண்டபம்
எங்கே மனிதநேயம்
ஊனமுற்ற தமிழ்
இன உறவும் மன...
சுதந்திரம்
ஏன் இந்த முடிவு
மனம் பதறுகிறோம்
நிழல் மரம்
இன்பம் பயக்குமா?
தமிழ் நாடகம்
சைபீர் முகமது
வேண்டாத சாதி
இன்றைய மாணவர்
புகைமூட்டம்
வாழ்த்துப் பரிமாரி...
தமிழ் நெடுங்கணக்கு
யாரிடம்போய்...
பிள்ளையையும்...
இந்நாட்டுத் தமிழன்...
செம்மொழி மாநாடு
பவன்- கறிஹவுஸ்
 
 
 
 
 
ஒரே மொழியே பேசும்,
ஒரே இனத்தைச் சேர்ந்த,
ஒரே மண்ணில் வாழும்,
நமது உறவுகள் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள்
அங்கு,
கேட்பாரின்றிப் பார்ப்பாரின்றிச்
சிங்களக் கொடியவன் கையில் சிக்குண்டு சிதறுண்டு
செத்து மடிவதைக் கண்ணால் கண்ட பின்னும்
அங்கிருக்கும் ஈனத் தமிழன்,
ஏதும் நடவாததுபோல் வெறுமெனே இருக்கின்றான்!
எதிரியுடன் கைகோர்த்துச் சொந்த உறவுகளையே
கொன்றழிக்க உடந்தையாய் இருக்கின்றான்!
தன்மானத் தமிழினத்தில் பிறந்த
தமிழச்சியா பெற்றெடுத்தாள் இந்தத்
தமிழினத் துரோகிகளை அந்தோ!
இந்தக் கேவலத்தை எங்குப் போய் முறையிடுவது?
நெஞ்சம் துடிக்கிறது!

அரசியலின் பேரால் தம் இனத்தானைக் காட்டிக் கொடுத்து
ஈன வாழ்வு நடத்தும் அவர்களுக்குத்
தம் சொந்த இனம் அழிவது பற்றிக் கவலை என்ன?
சீச்சீ! என்ன கேவலம் இது!
நம்மவர்களின் இந்த ஈன இயல்பைப் பார்த்து
உலகம் தூவென்று துப்புதடா!

இனி,
எப்படித் தமிழன் என்று
தலைநிமிர்ந்து வாழ்வது?

ஈழத்தில் நடக்கும் மனித அவலத்தைப் பார்த்து
இந்த உலகம் வேடிக்கை பார்க்கின்றது!
காரணம்,
தம் மதத்தைச் சேர்ந்த இனத்தவர்களோ
தம் நிறத்தை ஒத்தவர்களோ
அழியவில்லை என்பதற்காக மட்டுமன்றி,
அழியும் இந்த மக்களால்
தமக்கு இழப்புகள் ஒன்றுமில்லை என்பதற்காகவும்
அவர்கள் ஏழை மக்கள்,
அவர்களால் தமக்கு வரவுகள் ஏதும் இல்லை என்பதற்காகவும்
வாளாவிருக்கின்றதோ?
குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையிலாவது
குரல் கொடுக்கலாமே!

ஆம்! குரல்கொடுத்தது!
ஏதோ ஒப்புக்காக!
கண்துடைப்புக்காக!
என்னடா உலகம் இது!
மனிதநேயம் மறந்த மதிகெட்ட உலகம்!

உலக மனிதநேய பேரியக்கம் இருக்கிறது!
அது யாருக்காக இருக்கிறது?
தமிழனைத் தவிர்த்து மற்றவர்க்காக
மட்டும் இருக்கிறது! இயங்கிறது!

இன்றைய நமது நிலையைப் பார்த்தால்
அதுவே உண்மை!

மற்ற இனத்தவர் துன்புற்றால் மனிதநேயம் அங்கலாய்க்கிறது!
மறுகணமே உதவிட முனைகிறது!

ஆனால்,
தமிழன் துன்புற்றால் மட்டும்
வாய்மூடிக் கிடக்கிறது!
இதற்குப் பேர்தான் மனிதநேயமோ?
ஒருதலையான உங்கள் மனிதநேயத்தைக்
கொண்டு குப்பையில் போடுங்கள்!
என்னே கேடுகெட்ட மனிதநேயம்!

கொடிய வரிப்புலிகள் இனம்
உலகத்தில் அழிந்து வருவதாகவும்
அவை முற்றிலும் அழிந்து போகாமலிருக்க
விலங்கியல் வல்லுநர்கள்
தீவிர நடவடிக்கையில் இறங்கி
அவைகளைக் காப்பாற்ற பெரிதும் முயல்கின்றார்கள்!

ஆனால்,
இங்கே தாய்மண்ணுக்காகப் போராடும்
மனிதப் புலிகள் (விடுதலைப் புலிகள்)
மற்றும் ஈழத் தமிழ்மக்கள் அழிந்துவருவது பற்றி
எந்த நாய்களும் கவலைபடவில்லை!
கண்டுகொள்ளவில்லை!
சாகின்ற மனிதன் தமிழன் என்பதாலா!
என்னே கொடுமை!

பாலஸ்தீனம், ஈராக், லெபனான், ஆப்கானிஸ்தான் போள்ற
நாடுகளில் போரின் போது பொதுமக்கள் பாதிப்புற்றனர்!
இந்த உலகம் குரல்கொடுத்து ஆர்ப்பரித்தது! (நம்மினத்தவரும் உள்பட)
இன்று எம்மினத்தைச் சேர்ந்தவர்கள் படுகொலைக்கு ஆளாகிச்
சிதைந்து மடிகின்றபோது,

இந்த உலகம் ஒப்புக்கு
ஓரிரு அறிக்கைவிட்டு
வாய்மூடி மெளனம் காக்கின்றது!
ஒன்றுக்கும் உதவாத ஒப்பாரி எதற்கு?
இது மனிதநேயத்திற்கே மாபெரும் இழுக்கு!
மேலும்,
இது மனித வரலாற்றிலே மாறாத வடு!

மனிதநேயக் காவலர்களும்
ஐனா சபை தலைவர்களும்
அறிக்கைவிட்டார்கள்!
விட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்!
ஆறுதலுக்கா? கண்துடைப்புக்கா? வீம்புக்கா?
என்ன கூத்து நடக்கிறது?

இதுவரையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை!
ஏன் இப்படி இந்த ஏழை தமிழர்களை ஏமாற்றுகின்றார்கள்?
தமிழன் என்றால் ஏன் இவர்களுக்கு
இத்தனை இளக்காரம்?
ஓரவஞ்சம்?

இறைவனை வேண்டினோம்!
தர்மத்தை நம்பினோம்!
நல்லது எதுவும் நடக்கவில்லை!
அடுத்து மனிதனை நம்பினோம்!
அவனும் கண்டுகொள்ளவில்லை!

இனி,
எம் இனத்திற்கு ஏற்பட்ட இந்த அவலத்தை
யாரிடம்போய் முறையிடுவோம்!
ஓ.........!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...