Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
தமிழ்ப்பெயர்
தமிழ்நாட்டுத் தமிழன்
தமிழ்ச்செய்தி
இன்றைய தமிழ்ப்...
என்ன கொடுமை
பல்நோக்கு மண்டபம்
எங்கே மனிதநேயம்
ஊனமுற்ற தமிழ்
இன உறவும் மன...
சுதந்திரம்
ஏன் இந்த முடிவு
மனம் பதறுகிறோம்
நிழல் மரம்
இன்பம் பயக்குமா?
தமிழ் நாடகம்
சைபீர் முகமது
வேண்டாத சாதி
இன்றைய மாணவர்
புகைமூட்டம்
வாழ்த்துப் பரிமாரி...
தமிழ் நெடுங்கணக்கு
யாரிடம்போய்...
பிள்ளையையும்...
இந்நாட்டுத் தமிழன்...
செம்மொழி மாநாடு
பவன்- கறிஹவுஸ்
 
 
 
 
 
இந்தியா ஒரிசா வஙகாளத்திலிருந்து குடியேறி
தமிழினத்தோடு கலந்து கூட்டத்தைப் பெருக்கிக் கொண்ட
இனமே சிங்கள இனம்!
சேர மரபில் வந்த தமிழினமே
இலங்கையில் தொன்றுதொட்டு வாழும் இனம்!
அழிந்துகொண்டிருக்கும் இனமும் கூட!

சிங்களவன் செய்த ஓரவஞ்சச் செயலாலும்
நயவஞ்சகத் தன்மையாலும் தமிழர்கள் ஒடுக்கப் பட்டனர்!
நசுக்கப்பட்டனர்! சூரையாடப்பட்டனர்! அழிக்கப்பட்டனர்!
தம் சொந்த மண்ணில் சுதந்திர வாழ்வை இழந்து
தவித்தனர்! பரிதவித்தனர்!

பொறுத்தது போதுமென்று தமிழர்கள் பொங்கியெழுந்தனர்!
புலிகளாக மாறி ஆயுதம் ஏந்தினர்!
தம் முன்னோர்கள் தொன்றுதொட்டு வாழ்ந்த மண்ணில்
சுதந்திரமாக வாழப் போராடினர்!
தொடர்ந்து போராடிக்கொண்டும் இருக்கின்றனர்!

ராஜிவ் காந்தி இறக்க காரணமாயிருந்த
விடுதலைப் போராளிகளை,
இந்தியா பயங்கரவாதிகள் என்று
உலக அளவு முத்திரை குத்திவிட்டது!
சிங்களவனுக்கு இதுவே சாதகமாக அமைந்துவிட்டது!
அந்த வகையில்,
இந்தியா, சீனா, பாக்கிஸ்தான்,
மற்றும் பிற நாடுகளின் பக்கத்துணையோடு
ஒட்டுமொத்த தமிழினத்தையே
சிங்களவன் இன்று அழித்துக்கொண்டிருக்கின்றான்!
பல்லாயிரக் கணக்கான மக்களை அழித்தும் விட்டான்!

நிற்க.

இந்திய பிரதமர் (தம் கணவர்) ராஜிவ் காந்தியைக்
கொன்ற ஒரே காரணத்திற்காக
இன்று இலங்கையோடு சேர்ந்து ஈழத் தமிழினத்தையே!
இந்தியா (சோனியா) பழிவாங்குகிறது!
அத்தோடு மட்டுமல்லாது,
இந்தியாவின் எதிரி நாடுகளும்
ஒன்று சேர்ந்துகொண்டு தமிழினத்தை
அழிக்கத் தொடங்கிவிட்டன!
தமிழனுக்கு இது சோதன காலம்!
ஆ...!

இந்திய அமைதிப்படை ஈழத் தமிழனை
அழிக்கும் படையாய் மாறியதையும்
அங்கிருக்கும் தமிழ்ப்பெண்களின் கற்பைச்
சூரையாடும் படையாய் மாறியதையும்
இந்திய அரசிடம் (ராஜிவ் காந்தியிடம்) முறையிட்டும்
படையை வெளியேறக் கேட்டும்
ராஜிவ் காந்தியின் அரசு
சிறிதும் கண்டுகொள்ளவில்லை!

பின்பு என்ன நடக்கும்...

இந்திரா காந்தியைக் கொடிய முறையில் சுட்டுக் கொன்ற
சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஒருவருக்குப்
பிரதமர் பதவி கொடுத்துப் பெருமை கொள்கிறது இந்தியா!
நிறம் ஒத்துப் போகிறது போலும்!

இந்தியாவின் தலையீட்டை சிங்களவன் விரும்பாததால்
இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியைச்
சிங்களக் கடற்படை வீரன் ஒருவன்
அடித்துக் கொல்ல முயன்றான்!
துப்பாக்கியால் ஓங்கி அடித்துவிட்டான்!
தடுத்துப் பிடித்துவிட்டார்கள் அவனை!
உயிர் தப்பிவிட்டார் பிரதமர்!

அன்று அவர் அடிபட்டுப் உயிர் போயிருந்தால்...?

என்னே அவமானம்! வெட்கக்கேடு!
அவமானம் விளைவித்தவனை மன்னித்துவிட்டது
இன்று அந்நாட்டோடு நட்புறவு கொண்டாடுகிறது!
என்னே கேவலம் இது!

இவற்றையெல்லாம் ஆராய அவர்கள் தயாராயில்லை!
ஆனால்,
தமிழன் தவறிழைத்தால் மட்டும்
மன்னிப்பே இல்லையாம்!
இது
அவர்களுடைய வஞ்சத்தனமான கொள்கை!

எதிரியின் வீட்டில் குடியிருக்கும் தமிழா!
நாளை உன் எதிர்காலம் எப்படியோ?

இந்த ஒட்டுமொத்த உலகமே
தமிழனுக்கு எதிர்முகமாய்ச் செயல்படுகிறது!
மனிதநேய காவலர்களும் இந்த அவலத்தை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!
மனிதாபிமானம் சிறிதுமில்லாத
மதிகெட்ட மழுங்கையர்கள் எல்லாம்
மனிதநேயக் காவலர்களாம்!
தூ...!

கேடுகெட்ட உலகமே!

இந்த ஏழைத் தமிழினம் செய்த பாவம் என்ன?
இயற்கையும் நமக்கு எதிரியாய் இருக்கிறது
இறைவனும் நமக்கு இரங்கவில்லை!

உலக வரைபடத்தில் இலங்கை ஒரு சிறு தீவுதான்!
அல்ல! அல்ல!
சிறு புள்ளி மட்டுமே!

ஆனால்,
உலக வல்லரசு நாடுகள்
இலங்கையில் நடக்கும் மனித பேரவலத்தை
நிறுத்த வேண்டுகோள் விடுத்தால்
அதை மதியாது கண்டனம் தெரிவித்துச்
சிங்களவன் சீறுகின்றான்!

கண்டனம் தெரிவிக்கும் நாடுகள் மீது
நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறுகின்றான்!

அட!
என்னே நெஞ்சழுத்தம்!
சுண்டைக்காய் தேசத்துக்குரியவனுக்கு
எப்படி வந்தது இந்தத் துணிச்சல்
இந்தியா, சீனா, பாக்கிஸ்த்தான் போன்ற நாடுகள்
கொடுத்த ஊக்கத்தின் விளைவோ?

தனித்து நின்று போராட திராணியற்ற
போர் திறமையற்ற சிங்களவன்
உலக நாடுகளை நாடிப்
பிச்சை கேட்டுப் போர்க்கருவிகள் வாங்கி
போர்செய்து வெற்றி பெற்றதாகப் பறைசாற்றுகின்றான்!
என்னே பேடித்தனம்!

ஒரு சிறு புலிகூட்டத்தை அழிக்க
உலக நாடுகளின் உதவிகொண்டு வென்றெடுத்தது
பெட்டைத்தனமான செயல்!

இந்தக் கேவலச் செயலுக்கு
வெற்றி விழா வேறு கொண்டாடுகிறார்களாம்!
அட!
பேடிகளா!

மனித பேரவலத்தைத் தடுக்கக் கோரும்
வல்லரசு நாடுகள்,
இந்தச் சிறு நாட்டுக்குரிய
சிங்களவன் சீற்றலுக்கு வாய்மூடி
தம் வாலையும் சுருட்டிக்கொள்கிறது!

நம்ப முடியவில்லை!

இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...