|
ஐந்தாண்டுக்கு ஒரு முறையே
தமிழ்நாட்டுத் தமிழனின் தலைவிதி
நிர்ணயிக்கப் படுகிறது!
அல்ல! அல்ல!
வர்ணிக்கப் படுகிறது!
ஏய்!
தமிழ்நாட்டுத் தமிழனே!
ஏய்க்கும் நரிக்கதைகள்
படித்தது கிடையாதா?
சில
நரிகள் ஏய்ப்பதுவும்
நுமக்கென்ன புரியாதா?
கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்
செயல்படுத்தப் படுகிறதா?
அல்லது
கைவிடப் படுகிறதா?
பொறுத்திருந்து பார்!
அன்று
முடக்கப்பட்ட திட்டங்கள்
இன்று
முடுக்கிவிடப் படுகின்றனவா?
கிடப்பில் விடப் படுகின்றனவா?
ஆராய்ந்துபார்!
அறிவுகொண்டு
கூர்ந்துபார்!
கடந்த ஆட்சி காலங்களை
நடந்த காட்சி கோலங்களைச்
சற்று எண்ணிப்பார்!
சிந்தனை பண்ணிப்பார்!
அரசியல் சட்டங்களையும்
ஆட்சி முறைகளையும்
அறிந்துகொள்!
நாட்டை ஆளவும்
தெரிந்துகொள்!
இனி,
எமது நாடு! எமது மொழி! எமது இனம்!
எமது முன்னேற்றம்!
என்றே,
சிந்தனை செய்!
செயல்படுவோருக்கு
வந்தனைசெய்!
கல்லூரியில் தமிழ்!
காவல்துறையில் தமிழ்!
கணினியில் தமிழ்!
காணும் இடமெல்லாம்
தமிழ்! தமிழ்! தமிழ்!
என்று கூவினால்...
அது,
அது தீவிரவாத போக்கு!
எனக் கூறும் ஆட்சி வீழ்க!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
என்பதே தமிழரின் மாறாத குறிக்கோள்!
என்னும் ஆட்சி வாழ்க!
எண்ணினால் எரிச்சல்தரும் - தமிழ்
மண்ணிலே எத்தனை எத்தனை கட்சிகள்!
அத்தனை கட்சித் தலைவர்கள்,
அனைவரும் அருந்தமிழ் பேசிடினும்
அவர்கள்,
அனைவரும் தமிழர் அல்லவே! - இது
மெய்யன்றிப் பொய்யல்லவே!
தமிழ்நாட்டையும் தமிழரையும்
தமிழனே ஆளவேண்டும்! - தன்மானத்
தமிழனே ஆளவேண்டும்! - உண்மைத்
தமிழனே ஆளவேண்டும்!
தமிழர் அல்லாதவரைத் தாள்பணியும்
தன்மானமற்ற போக்கை
ஒழிக்க வேண்டும்! - தமிழன்
விழிக்க வேண்டும்! - நாடு
செழிக்க வேண்டும்! - புல்லுருவிகளைக்
கழிக்க வேண்டும்!
ஓர் ஆந்திர நாட்டையோ
கேரள நாட்டையோ
கன்னட நாட்டையோ
ஒரு தமிழன்,
ஆளக் கூடுமோ?
ஆளத்தான் விடுவரோ?
இங்கு நம் தமிழ்நாட்டில்
நடப்பதென்ன?
இன்னும் தமிழன்
தூங்கிக் கிடப்பதென்ன!
ஏய்!
தமிழ்நாட்டுத் தமிழனே!
நன்கு ஆராய்ந்துபார்!
உண்மை புலப்படும்!
தீர அலசிப்பார்!
போலிகளின் பச்சோந்தித்
தன்மை வெளிப்படும்!
தமிழ்நாட்டில் - நம்
தமிழ்நாட்டில்
இனி,
மொழி! இனம்! கலை! பண்பாடு!
தொழில்நுட்பம்! விவசாயம்!
இன்ன பிற யாவும்
வளம்பெற - நாடு
நலம்பெற...!
தமிழைத் தாய்மொழியாய்க் கொண்ட
தமிழனே தமிழ்நாட்டை ஆளவேண்டும்! - உண்மைத்
தமிழனே தமிழ்நாட்டை ஆளவேண்டும்!
தன்மான மிக்க தமிழனே ஆளவேண்டும்!
என்று,
தமிழ்நாட்டுத் தமிழனே!
இன்றே அதுவும் நன்றே!
முடிவு செய்! விடிவு மெய்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|