|
ஆண்டுகள் ஐம்பது ஓடிய பின்னும்
அடிநிலை இனமென உள்ளோம்!
தாண்டவம் ஆடும் வறுமையின் கோட்டைத்
தாண்டிய தமிழர் எத்தனைபேர்?
ஆண்டவன் அருள்வான் அவனன்றி அணுவும்
அசைவதும் ஏதெனச் சொல்வார்!
பூண்டொடு தமிழன் புழுதியில் வீழ்ந்து
புரள்வதும் தெய்வத்தின் செயலோ?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|