|
சீறிவரும் வன்புயலில்
சிக்குண்டு மாய்கின்றாய்!
பீறியெழும் எரிமலையின்
பெருஞ்சினங்கண் டோடுகின்றாய்!
வீறுகொண்டு பாய்கின்ற
மின்னலைக்கண்டு அஞ்சுகின்றாய்
கூறிவரா நிலச்சரிவில்!
குலைநடுங்கிச் சாகின்றாய்
மீறிவரும் பேரலையில்
வீழ்ந்துமிக நலிகின்றாய்!
ஏறிவரும் வெள்ளத்தில்
இன்னலுற்றுத் தவிக்கின்றாய்!
மாறிவரும் வானிலையால்
வறட்சிகண்டு துடிக்கின்றாய்!
ஆறறிவு மானிடா
அவன்செயலைத் தடுப்பார் யார்?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|