Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
ஒன்றுபட்டு வாழும் உயர்நோக்கை மாந்தரிங்கு
என்றுதான் சிந்தையில் ஏற்றுவர் என்தோழி?

எட்டப்பர் என்னும் இழிந்தவர் இங்கில்லாமல்
ஒட்ட நொறுக்கினால் ஒன்றாவர் என்தோழி !

வாழ்வில் ஒருவன் வளமடைந்தால் அன்னவனை
வீழ்வுறச் செய்ய விழைபவர் யார்தோழா?

தன்னைப்போல் மற்றவனும் தாழ்ந்திருக்க வேண்டுமெனச்
சின்னபுத்தி கொண்டிருக்கும் தீயவர்தான் என்தோழி!

சமயத்தில் மேலென்றும் தாழ்வென்றும் பேசி
சமரச வாழ்வினைச் சாகடிப்பார் யார்தோழா?

மனிதனாய்த் தோன்றி மழுங்கையாய் வாழும்
சனியன்கள் தானிந்தச் சத்தியர்கள் என்தோழி!

இறைவன் இருககும் இடத்தை மறந்து
நெறியின்றி வாழ்கின்ற நீசர்கள் யார்தோழா?

சகோதரத் தன்மையைச் சற்றேனும் பேணாத்
தகவிலா ஈனச் சழக்கர்தான் என்தோழி!

சாதியில் மேல்படி தாழ்படி என்றிங்கே
பேதங்கள் பேசிடும் பேதையர் யார்தோழா?

கேணியில் ஆழ்ந்து கிடக்கும் தவளைகள்தான்
கோணல்மதி கொண்டஇக் கூறுகெட்டார் என்தோழி!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...