|
கோவிலில் திருவழா நாளில்
குண்டர்போல் சண்டை ஏன் தோழா?
பூவுல கத்தவர் நம்மைப்
புல்லென மதிக்கவா தோழா?
வீரத்தில் நாம் வரிபுலிதான்
விளக்கவும் வேண்டுமோ தோழா?
சூரத்தை நம்குள்ளே காட்டித்
தொலைப்பது சரியில்லை தோழா!
இம்மண்ணில் நம்மவர் தொகையோ
இம்மிதான் எண்ணிப்பார் தோழா!
நம்மவர்க்குள்ளேயே நட்பு
நலிவுற்றுப் போவதா தோழா?
ஒற்றுமை பேணுதல் இன்றி
உயர்வதும் ஏதடா தோழா?
மற்றவர் ஒன்றுபட் டிங்கு
வாழ்வதைப் பாரடா தோழா!
பண்புக்கு இலக்கணம் வகுத்த
பண்பிபினர் நாமடா தோழா!
மண்புகழ் பேசும் தமிழர்
மரபினைக் கெடுப்பதா தோழா?
அண்ணனும் தம்பியும் போல
அனைவரும் பழகினால் தோழா
மண்ணிலே நம்மையும் எதிர்க்க
வருபவர் யாரடா தோழா?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|