Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
கோவிலில் திருவழா நாளில்
குண்டர்போல் சண்டை ஏன் தோழா?
பூவுல கத்தவர் நம்மைப்
புல்லென மதிக்கவா தோழா?

வீரத்தில் நாம் வரிபுலிதான்
விளக்கவும் வேண்டுமோ தோழா?
சூரத்தை நம்குள்ளே காட்டித்
தொலைப்பது சரியில்லை தோழா!

இம்மண்ணில் நம்மவர் தொகையோ
இம்மிதான் எண்ணிப்பார் தோழா!
நம்மவர்க்குள்ளேயே நட்பு
நலிவுற்றுப் போவதா தோழா?

ஒற்றுமை பேணுதல் இன்றி
உயர்வதும் ஏதடா தோழா?
மற்றவர் ஒன்றுபட் டிங்கு
வாழ்வதைப் பாரடா தோழா!

பண்புக்கு இலக்கணம் வகுத்த
பண்பிபினர் நாமடா தோழா!
மண்புகழ் பேசும் தமிழர்
மரபினைக் கெடுப்பதா தோழா?

அண்ணனும் தம்பியும் போல
அனைவரும் பழகினால் தோழா
மண்ணிலே நம்மையும் எதிர்க்க
வருபவர் யாரடா தோழா?

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...