|
விதவைகள் வாழ்வின்றி வீணிலிங்கு வாடுவதை
விதிசெய்த சதியென்று வெறுங்கதைகள் சொல்கின்றார்!
மதியற்ற மூடர்களின் மனம்வெறுக்கும் போதனையை
புதைத்(து) இந்த பெண்டிர்கள் புரட்சியிலே வாழ்வதென்றோ?
கொண்டவனை இழந்தவுடன் கோதையர்கள் வாழ்வினிலே
தண்டனைகள் அனுபவித்துச் சாவதுதான் தர்மமெனும்
பண்டையநாள் போக்கதனைப் படுகுழியில் புதைத்தொழிக்க
அண்டமிதில் வாழ்கின்ற ஆயிழையர் துணிவதென்றோ?
விண்ணினையும் ஆளுகின்ற விஞ்ஞான உலகமிதில்
பெண்ணொருத்தி துணையிழந்தால் பின்(பு) அவளோர் தனிமரமாய்
மண்ணுலகில் வாழ்வதுதான் வகையென்று சொல்கின்ற
புண்ணியமில்லார் சொல்லைப் பூவையர்கள் ஒழிப்பதென்றோ?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|