Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
விதவைகள் வாழ்வின்றி வீணிலிங்கு வாடுவதை
விதிசெய்த சதியென்று வெறுங்கதைகள் சொல்கின்றார்!
மதியற்ற மூடர்களின் மனம்வெறுக்கும் போதனையை
புதைத்(து) இந்த பெண்டிர்கள் புரட்சியிலே வாழ்வதென்றோ?

கொண்டவனை இழந்தவுடன் கோதையர்கள் வாழ்வினிலே
தண்டனைகள் அனுபவித்துச் சாவதுதான் தர்மமெனும்
பண்டையநாள் போக்கதனைப் படுகுழியில் புதைத்தொழிக்க
அண்டமிதில் வாழ்கின்ற ஆயிழையர் துணிவதென்றோ?

விண்ணினையும் ஆளுகின்ற விஞ்ஞான உலகமிதில்
பெண்ணொருத்தி துணையிழந்தால் பின்(பு) அவளோர் தனிமரமாய்
மண்ணுலகில் வாழ்வதுதான் வகையென்று சொல்கின்ற
புண்ணியமில்லார் சொல்லைப் பூவையர்கள் ஒழிப்பதென்றோ?

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...