Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
இருக்கும்வரை உறவாடும் ஈனர்களை நம்பி
  எந்தஒரு காரியத்தும் இறங்காதே தம்பி!
உருவினிலே நல்லவர்போல் உலவுகின்ற அற்ப
  உலுத்தர்களைக் கண்ணாலே உணரவேண்டும் தம்பி!

காரியத்தைச் சாதிக்க கால்பிடிக்கும் கெட்ட
  கலியுகத்து மாந்தர்களே காணுகின்றார் எங்கும்
பாரினிலே நீதிநெறி பாவபுண்ணி யங்கள்
  பாழாகி வருகுதின்று பார்த்துநட தம்பி!

உலகநிலை புரியாத ஓராறு வயதில்
  உறவெல்லாம் அமுதாக இனிக்குமடா தம்பி!
பலகருத்தைப் புரிகின்ற பக்குவம்நீ அடைந்தால்
  பந்தத்தின் பாசமெல்லாம் வேசமென்று புரியும்!

உடன்பிறப்பே உதவியென உனக்குள்ளே எண்ணி
  ஒருநாளும் இருக்காதே உன்னைத்தான் தம்பி!
உடலில்உயிர் இருக்கும்வரை உனக்குத்துணை நீயே!
  உடன்பிறப்பின் உதவியெல்லாம் ஓரெல்லைக் குள்தான்!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...