|
சாதியினால் தரம்பிரிக்கும் தன்மையெல்லாம் ஆரியர்கள்
ஆதியிலே நம்மைப்பிரித்து ஆள்வதற்குச் செய்தசதி!
மேதினியில் இருப்ப(து) இரு சாதியன்றி வேறில்லை!
மேதைவழி நிற்பவர்க்கு வெங்காய சாதியில்லை!
உத்தமர்கள், உயர்வென்றும் தாழ்வென்றும் பேசுவதே
பித்தர்களின் செயலென்ற பெற்றியினை உணர்ந்துவிட்டார்!
எத்தர்களே கையாளும் ஏமாற்று வித்தையிது!
வித்தகரும் சித்தர்களும் வேண்டாத வழக்கமிது!
வேண்டாத சாதிகளைத் தூண்டிவிடும் நீசர்களைக்
கூண்டோடு ஒழித்தாலும் குற்றமில்லை சாதிகட்டைத்
தாண்டாது கிணற்றுக்குள் ஆழ்ந்திருக்கும் தவளைகாள்!
ஈண்(டு)ஆர்க்கும் பிறப்(பு)இறப்பில் ஏதேனும் பேதமுண்டோ?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|