|
காசொன்றே குறியாகக் கள்ளமுடன் பழகுகின்ற
பாசாங்கு மனிதர்கள் பாரினிலே நிரம்பியதால்
மாசற்ற அன்புமன மானிடரின் நல்லுறவு
தூசாகப் போனதெண்ணித் துடிக்கின்றேன் அம்மாவோ!
மெய்யன்போடு உறவாடும் மேலான நல்லவரை
வையத்தில் கண்டிடவோர் வழியின்றித் தவிக்கின்றேன்!
பொய்யன்போடு உறவாடும் புல்லர்களின் வீண்நட்பில்
உய்யாமல் போவதுவே உயர்ந்ததென எண்ணுகின்றேன்!
இல்லாரை எல்லோரும் எள்ளுகின்ற காலமிதே
எல்லாரும் அறிந்ததுதான் இல்லையென்று சொல்லவில்லை
பொல்லாத பணச்செருக்கால் பொன்னான உயர்அன்பை
புல்லாக மதிப்பதுவா புண்ணியந்தான் கிடைத்திடுமா?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|