Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
நெஞ்சில் நஞ்சு சிறிதுமின்றி
  நேர்மை கொண்ட மனத்தோடு
வஞ்ச மின்றி உறவுகொண்டால்
  வாழ்வில் இன்பம் பொய்யாமோ?

இல்லை என்று வந்தவர்க்கு
  இனிதே உதவி செய்கின்ற
நல்லோர் இன்பம் பெறுவரெனும்
  நல்ல வாக்கும் பொய்யாமோ?

தீமை பிறர்க்குச் செய்கின்ற
  சிறுமை எண்ணம் சிறிதுமற்ற
துய்மை நெஞ்சம் கொண்டவர்கள்
  சுகம் அடைதல் பொய்யாமோ?

உலக மக்கள் யாவருமே
  ஒருதாய் மக்களென் றெண்ணும்
கலக மற்ற நெஞ்சினிலே
  கனியும் இன்பம் பொய்யாமோ?

பணமே வாழ்வில் பெரிதென்று
  பாச மின்றி வாழாமல்
குணமும் அன்பும் மெய்யென்று
  கொண்டார்க்(கு) இன்பம் பொய்யாமோ?

உண்மை அன்பில் உறவாடும்
  உள்ளத் துய்மை பெற்றவர்க்கு
மண்மீ தினிலே என்றென்றும்
  வாய்க்கும் இன்பம் பொய்யாமோ?

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...