Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
வாழ்த்திசைப் பறவைகள் இசைத்திட - வானம்
  வண்ணத்தி லேஎழில் கோலங்கள் வரைந்திட!
கீழ்த்திசைக் கதிரவன் சிரித்திட - இன்பக்
  கிளுகிளுப் பூட்டும் தீபாவளி பிறந்ததே!

அன்றலர்ந்த மலர்முகப் பிள்ளைகள் - புத்
  தாடையில் களிகொண்டு துள்ளிடும் காட்சிகள்!
என்றுமில் லாதஇன் பத்திலே - அங்கு
  ஈன்றவர் உவந்திடும் அழகினைக் கண்டிரோ!

நங்கையர் தேர்களைப் போலவே - எங்கும்
  நடைபயின்று உலாவரும் கண்குளிர் காட்சிகள்!
பொங்குசெந் தமிழ்இளங் காளையர் - அந்தப்
  பூவையர் எழில்கண்டு சொக்குதல் கண்டிரோ!

அண்டைவீட்டு அயலின நண்பர்கள் -சூழ
  அன்பொளி தவழ்ந்திடும் இல்லங்கள் எத்தனை!
கண்டவர் முகமெலாம் அன்பொளி! - அதைக்
  காண்பவர் முகத்திலும் அன்பொளி அன்பொளி!

பட்பட் படபட் பட்டென - எங்கும்
  பட்டாசு முழங்கிடும் முரசொலி கேட்டிரோ!
பற்பல வாண வேடிக்கைகள் - இரவைப்
  பகலெனச் செய்திடும் காட்சிகள் காணிரோ!

ஒன்றினைத் திடும்பெரு நாளிது - நம்
  உள்ளத்தில் அன்பொளி ஏற்றிட வந்ததே!
நன்றிது! நன்றிது! வாழ்கவே - இனி
  நாள்தொறும் வாழ்விலே அன்பொளி சிறக்கவே!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...