Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
போட்டபணம் பெருகுமென்றார் போகும்இனி வறுமையென்றார்!
வாட்டமெல்லாம் தீருமென்றார் வாழ்வில்வளம் சேருமென்றார்!
நாட்டிலினி மற்றவர்போல் நாமும்உயர்வோம் என்றார்!
ஆட்டமெல்லாம் இன்றறிந்தோம் அத்தனையும் பித்தலாட்டம்!

அறுபத்தா றாயிரம்பேர் அள்ளியள்ளிக் கொடுத்ததெல்லாம்
பொறுப்பற்ற தலைவர்களின் புத்திகெட்ட செயல்திறத்தால்-
வறுமைக்கு விடைசொல்ல வந்த நம் மைக்காவின்று
-வெறும்பட்ட மரம்போல வீம்புக்கு நிற்குதய்யா!

பொருளியல்மேம் பாட்டினில்நாம் போற்றும்படி இல்லைஅரசு
அருளுமொரு நிலையுமில்லை அக்கரையம் கொள்ளவில்லை!
ஒருவழியைக் காண்பதற்கே உதித்தது மைக்காஹோல்டிங்ஸ்!
திருப்புமுனை எனநினைத்தோம் உருப்படவே இல்லையய்யா!

சென்றபணம் மீளாது திரும்பவும்நம் கைசேராது
என்றிருக்க நாமென்ன இளிச்சவாய்க் கூட்டமா?
ஒன்றுபடுவோம் இன்றே ஒருமுடிவு காண்பதற்கு!
சென்றிடுவோம் நீதிமன்றம்! தீர்ப்பென்ன கண்டிடுவோம்!

சிந்தியதம் வேர்வையினால் சேர்த்துவைத்த பணமெல்லாம்
மந்திகளின் கைகளிலே வழங்கியதோர் தன்மையைப்போல்
இந்தியரின் பணத்துக்(கு) ஏன் அந்நியரைக் காவல்வைத்தார்?
சொந்தஇனத் தவரெல்லாம் துப்பில்லார் எனும்நினைப்பா?

படித்தவரும் பாமரரும் பணம்படைத்தோர் ஏழையரும்
அடகுவைத்தும் கடன்பட்டும் உடன்பட்டும் பணம்கொடுத்தோம்!
கிடைத்ததெல்லாம் சுருட்டிவிட்டார் கேள்விகணை தொடுத்துவிட்டால்
நொடித்தகதை சொல்லியே நொண்டிச்சிந்து பாடுகின்றார்!

ஆண்டறிக்கை அனுப்பவில்லை ஆவணங்கள் கிடைக்கவில்லை!
வேண்டியவர்க்கே அனுப்பி விருந்தோம்பல் செய்து, மனம்
தீண்டியவர் செய்கையிலே சிறிதும் முறையில்லை! குழி
தோண்டியவர் கூட்டமெனச் சொல்பவர்மேல் தப்புமில்லை!

கொஞ்சமல்ல சாமீயோ! கோடியய்யா இலட்சமய்யா!
வஞ்சமின்றிக் கொடுத்தோமே வாய்பேச்சை நம்பி!, அட!
துஞ்சுவதற்கா உள்ளார் தொழில்வித்தை மேதைகள்?
எஞ்சியுள்ள சொத்தினையும் ஏப்பமிட்டுச் செல்வாரோ ?

வைத்திருந்த பணம்போன வயிற்றெறிச்சல், நெஞ்சினில்முள்
தைத்தகதை சொல்லவோ? சதிகாரர் வெல்லவோ?
பைத்தியம்போல் பிதற்றிடவும் பதறிடவும் செய்துவிட்டார்!
வைத்தியம் செய்வார்ஆரோ? மனஉளைச்சல் தீர்ப்பாரோ?

இத்தனைஆண்டுகட் சென்றும் இன்னும்இழப் பென்கின்றார்!
வித்தகரும் வல்லுநரும் வெட்டிக்கா இருக்கின்றார்?
கொத்தவரங் காயல்ல கொடுத்தபணம்! மைக்காவின்
மொத்தபணம் போனதெங்கே? முழுவிவரம் வேண்டுமய்யா!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...