Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
என்தமிழர் என்றாலே இளக்காரமாய் எண்ணும்
நன்றிகெட்ட பேருக்கு நவின்றிடுவேன் ஓருண்மை!
அன்றுபெறும் காடாக அடர்ந்திருந்த இம்மண்ணை
நின்றொளிரும் நாடாக்க நித்தம்உயிர் தந்தவர்யார்?

செங்கதிரோன் கிழக்கேறிச் செகம்விடியும் முன்னமே
அங்கமெல்லாம் கொசுகடிக்க அதிகாலை கடுங்குளிரில்
இங்குமரம் சீவியவர் எவர்சொல்லீர்? இரப்பருக்குத்
தங்கவிலை அந்தோ! எம் தமிழருக்கு என்னவிலை?

கடும்வெயிலில் தோள்வலிக்க கல்சுமந்து தணல்பொங்கும்
சுடுதாரைக் கையேந்தி தோல்கருக்க உடல்இளைக்க
நெடுஞ்சாலை போட்டிங்கு நிலைகுலைந்து போனவரை
எடுத்தெறிந்து பேசுவது இனியேனும் வேண்டாமே!

அலுங்காமல் ஊர்ந்துவரும் அழகுபுகை வண்டிக்கு
வலுவான நெடுந்தண்ட வாளங்கள் அமைத்திங்கு
எலும்பொடிய உழைத்துயிரும் ஈந்வர்எம் தமிழருக்குச்
சலுகைதர மறுத்தல்இது தருமமில்லை! தருமமில்லை!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...